80,90 ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரிக்காத அமெரிக்கா, இந்தியா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அப்போராட்டத்தை உள்நாட்டு கலவரம் என்றும் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும் சித்தரிக்கத் தொடங்கின.
வங்காளதேசம் எனும் தனிநாட்டை உருவாக்கத் முன்னோடியாக இருந்த இந்தியா, மே 21, 1991 ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் போராட்டத்திற்கு எதிரான அகில உலக அரசியலில் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியது. இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகவும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த காலக்கட்டத்தில் ஈழ விடுதலை சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கியதற்கான அரசு சான்றுகள் நிறையவே உள்ளன.
Read More »